தமிழர் திருநாள் - பொங்கல் பண்டிகை
பொங்கல் பொங்கல் பொங்கல் என்று
போற்றிட வந்திடும் பண்டிகை ஒன்று
பொலிவோடு தமிழர்தம் இல்லங்களில் நின்று
புன்னகை புரிந்திடும் தைத்திங்கள் அன்று!
பொங்கல் என்றாலும் பொங்கல் பொங்கல்தான்
பொங்கிவரும் புதுப்பானைச் சோறும் பொங்கல்தான்
திங்கள் என்றாலும் திங்கள் திங்கள்தான்
தீந்தமிழர் கொண்டாடும் தைத்திங்கள் திங்கள்தான்!
மான்விழி என்ற தமயந்திபால் சென்று
மஞ்சோடு அன்னம் வந்தது போன்று
மார்கழி என்ற மாதமும் சென்று
மகிழ்வோடு அனுப்புமே தைத்திங்கள் ஒன்று!
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்னும்
கூற்றுகேற்ப பழையதை நீக்கி புதியதை புகுத்தும்
மரபாம் முதல்படிஎன்று பொருட்கள் மட்டுமல்லாமல்
புதிய எண்ணங்களையும் தோற்றுவிப்பதே போகிப்பண்டிகை!
உலகினிக்கு ஒளியை ஈந்திடும் ஓர்
உன்னத தெய்வமாம் ஒளிர் சூரியன்
உழவுக்கும் அவனே உறுதுணை என்று
உளமார வணங்கி வைப்பதே பெரும்பொங்கல்!
காடு கழனியெலாம் உழுதிடும் மற்றும்
கபிலையும் இறைத்திடும் காளை மாடுகளுக்கு
கையோடு நன்றியைக் காட்டத் தான்
களிப்போடு வைப்பதே மாட்டுப்பொங்கல்!
மாடோடு மாடாய் உழைத்திடும் நம்
மனிதனும் மாடும் மகிழ்ந்து துள்ளிடவே
ஆடும் ஆட்டம் ஆட்டம் தான்
ஆனந்தம் பொங்கும் பாரிவேட்டை தான்!
போற்றிட வந்திடும் பண்டிகை ஒன்று
பொலிவோடு தமிழர்தம் இல்லங்களில் நின்று
புன்னகை புரிந்திடும் தைத்திங்கள் அன்று!
பொங்கல் என்றாலும் பொங்கல் பொங்கல்தான்
பொங்கிவரும் புதுப்பானைச் சோறும் பொங்கல்தான்
திங்கள் என்றாலும் திங்கள் திங்கள்தான்
தீந்தமிழர் கொண்டாடும் தைத்திங்கள் திங்கள்தான்!
மான்விழி என்ற தமயந்திபால் சென்று
மஞ்சோடு அன்னம் வந்தது போன்று
மார்கழி என்ற மாதமும் சென்று
மகிழ்வோடு அனுப்புமே தைத்திங்கள் ஒன்று!
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்னும்
கூற்றுகேற்ப பழையதை நீக்கி புதியதை புகுத்தும்
மரபாம் முதல்படிஎன்று பொருட்கள் மட்டுமல்லாமல்
புதிய எண்ணங்களையும் தோற்றுவிப்பதே போகிப்பண்டிகை!
உலகினிக்கு ஒளியை ஈந்திடும் ஓர்
உன்னத தெய்வமாம் ஒளிர் சூரியன்
உழவுக்கும் அவனே உறுதுணை என்று
உளமார வணங்கி வைப்பதே பெரும்பொங்கல்!
காடு கழனியெலாம் உழுதிடும் மற்றும்
கபிலையும் இறைத்திடும் காளை மாடுகளுக்கு
கையோடு நன்றியைக் காட்டத் தான்
களிப்போடு வைப்பதே மாட்டுப்பொங்கல்!
மாடோடு மாடாய் உழைத்திடும் நம்
மனிதனும் மாடும் மகிழ்ந்து துள்ளிடவே
ஆடும் ஆட்டம் ஆட்டம் தான்
ஆனந்தம் பொங்கும் பாரிவேட்டை தான்!
மெல்லத் தமிழினிச் சாகும்
இன்றைய காலகட்டத்தில் தமிழர்களாகிய நமக்கு ஆங்கில மோகம் என்னும் போதை தலைக்கேறியிருக்கிறது. எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற போக்கே நிலவி வருகிறது. "மெல்லத் தமிழினிச் சாகும், அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்" என்றான் பாரதி. அவன் கூற்று நம் காலத்திலேயே அரங்கேறி விடுமோ என்ற அச்சம் எனக்கு எழுகிறது.
ஆந்திராவை சேர்ந்த இருவர் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் தெலுங்கில் தான் உரையாடி மகிழ்கிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த இருவர் சந்திக்கும் போது பேசிக் கொள்வது கன்னடத்தில் தான். இது மராட்டியம், மலையாளம், இந்தி உட்பட எந்த மொழியை தாய்மொழியாய் கொண்டவர்க்கும் பொருந்தும். ஆனால் தமிழகத்தை சேர்ந்த இருவர் சந்திக்கும் போது ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள். தமிழையே அறியாதவர் போல் நடந்து கொள்வதை மேன்மையாக நினைக்கிறார்கள். இது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல் அல்லவா?
உலகத்திலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் தான். ஒரு மொழியானது தோன்றும் போது முதலில் பேச்சு மொழியாய் (உலக வழக்கு) இருந்து தான் பின்னர் எழுத்துருவிற்கு (நூல் வழக்கு) வரும். இந்த கட்டத்தை அடைவதற்கே எந்த ஒரு மொழிக்கும் சில நூறு வருடங்கள் பிடிக்கும் என்பார்கள் மொழி வல்லுனர்கள். நூல் வழக்கை அடைந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் இலக்கணங்கள் எந்த ஒரு மொழியிலும் தோன்ற முடியும். சுருங்கச் சொன்னால், ஒரு மொழியானது பல்லாயிரம் வருடங்கள் செழித்தோங்கிய பின்னர் தான் இலக்கண புத்தகங்களை வடிக்க முடியும். ஆனால் ஆங்கிலமே உலகில் தோன்றாத காலத்தில் நம்மிடையே தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இவ்விலக்கண நூல்களை அடிப்படையாய் கொண்டு எண்ணற்ற இலக்கியங்களும் நம் மொழியில் தோன்றியிருக்கின்றன.
உலகில் முதலில் மனிதன் தோன்றிய இடம் இலெமூரியா கண்டம் (இன்றைய நிலையில் கடலுள் இருக்கிறது) தான். உலக முதல் மொழியும் தமிழ் தான். உலக முதல் நாகரிகம் தமிழர் நாகரிகமே. மற்ற மனிதரெல்லாம் காட்டுமிராண்டிகளாய் இருந்த போது கப்பல் ஓட்டி வாணிபம் நடத்திய ஒரே இனம் தமிழ் இனம் தான். இலெமூரியா கண்டத்தில் பல லட்ச வருடங்களுக்கு முன்னரே அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக்கண நூல் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்று சொன்னால் தமிழ் மொழியின் தொண்மையை கணக்கிட்டு பாருங்கள். இதை தான் , "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி" என்பார்கள். ஆனால் கடல் கொண்டு விட்டதால் இலெமூரியா கண்டமும் அழிந்தது, அகத்தியமும் கடலில் மூழ்கி விட்டது என்பது வரலாறு. போலி பகுத்தறிவாளர்கள், கடலாவது?, கொள்வதாவது?, அகதியமாவது? ,இலக்கணமாவது?, கண்ணால் காணாமல் எப்படி நம்புவது என்றார்கள், சமீபத்தில் ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படும் வரை. நமக்கு தெரியவில்லை என்பதற்காக ஆழிப்பேரலை என்பது பொய்யாகி விடுமா? அகத்தியம் தான் இல்லையென்று ஆகி விடுமா?
இத்தகு சிறப்பு பொருந்திய நம் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இழிச்செயலாக இனியும் எண்ணாதீர்கள். தமிழர்களாகிய நாம் முடிந்த வரை தமிழிலியே எழுத வேண்டும், தமிழிலியே பேச வேண்டும், தமிழிலியே கையொப்பமிட வேண்டும். என்னிடம் சமீபத்தில் நண்பர் ஒருவர் கேட்டார், "என்னங்க தமிழ்ல கையெழுத்து போடுறீங்க?", நான் திருப்பி கேட்டேன், " வேண்டுமென்றால் நான் இந்தியில் போடவா என்று?". பாவம், அவர் முகத்தில் ஈயாடவில்லை.
தலைப்பெழுத்து முதற்கொண்டு உங்கள் பெயரை தமிழிலேயே எழுதுங்கள். உதாரணமாக என் பெயரை எழுதும் போது மு. திருமால் அழகன் என்றே எழுத வேண்டும். M. திருமால் அழகன் என்று எழுவது பெரும் தவறு.'M' என்பது என்ன?. உலகில் எந்த மொழியிலும் அவர்கள் தலைப்பெழுத்தை வேற்று மொழியில் எழுதுவதில்லை. தங்கள் தாய்மொழியில் தான் எழுதுகிறார்கள். ஆனால் தமிழன் மட்டுமே தன் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி அகமகிழ்கிறான்.
நான் ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையும் அறிந்து கொள்ளுங்கள், ஆனால் தமிழை உதாசினபடுத்தாதீர்கள் என்பது தான் என் ஆதங்கம். நீங்கள் சாப்பிடும் அரிசிச் சோறு தமிழாய் இருக்கட்டும், பொரியல், கூட்டு, அப்பளம் போல் மற்ற மொழிகள் இருக்கட்டும். சோற்றை ஆங்கிலமாக்கிவிட்டு, தயவு செய்து தமிழை ஊறுகாய் ஆக்கிவிடாதீர்கள். தமிழ் என்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு நம் எதிர்கால சந்ததியினரை தயைக்கூர்ந்து தள்ளிவிடாதீர்கள்.
ஆந்திராவை சேர்ந்த இருவர் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் தெலுங்கில் தான் உரையாடி மகிழ்கிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த இருவர் சந்திக்கும் போது பேசிக் கொள்வது கன்னடத்தில் தான். இது மராட்டியம், மலையாளம், இந்தி உட்பட எந்த மொழியை தாய்மொழியாய் கொண்டவர்க்கும் பொருந்தும். ஆனால் தமிழகத்தை சேர்ந்த இருவர் சந்திக்கும் போது ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள். தமிழையே அறியாதவர் போல் நடந்து கொள்வதை மேன்மையாக நினைக்கிறார்கள். இது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல் அல்லவா?
உலகத்திலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் தான். ஒரு மொழியானது தோன்றும் போது முதலில் பேச்சு மொழியாய் (உலக வழக்கு) இருந்து தான் பின்னர் எழுத்துருவிற்கு (நூல் வழக்கு) வரும். இந்த கட்டத்தை அடைவதற்கே எந்த ஒரு மொழிக்கும் சில நூறு வருடங்கள் பிடிக்கும் என்பார்கள் மொழி வல்லுனர்கள். நூல் வழக்கை அடைந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் இலக்கணங்கள் எந்த ஒரு மொழியிலும் தோன்ற முடியும். சுருங்கச் சொன்னால், ஒரு மொழியானது பல்லாயிரம் வருடங்கள் செழித்தோங்கிய பின்னர் தான் இலக்கண புத்தகங்களை வடிக்க முடியும். ஆனால் ஆங்கிலமே உலகில் தோன்றாத காலத்தில் நம்மிடையே தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இவ்விலக்கண நூல்களை அடிப்படையாய் கொண்டு எண்ணற்ற இலக்கியங்களும் நம் மொழியில் தோன்றியிருக்கின்றன.
உலகில் முதலில் மனிதன் தோன்றிய இடம் இலெமூரியா கண்டம் (இன்றைய நிலையில் கடலுள் இருக்கிறது) தான். உலக முதல் மொழியும் தமிழ் தான். உலக முதல் நாகரிகம் தமிழர் நாகரிகமே. மற்ற மனிதரெல்லாம் காட்டுமிராண்டிகளாய் இருந்த போது கப்பல் ஓட்டி வாணிபம் நடத்திய ஒரே இனம் தமிழ் இனம் தான். இலெமூரியா கண்டத்தில் பல லட்ச வருடங்களுக்கு முன்னரே அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக்கண நூல் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்று சொன்னால் தமிழ் மொழியின் தொண்மையை கணக்கிட்டு பாருங்கள். இதை தான் , "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி" என்பார்கள். ஆனால் கடல் கொண்டு விட்டதால் இலெமூரியா கண்டமும் அழிந்தது, அகத்தியமும் கடலில் மூழ்கி விட்டது என்பது வரலாறு. போலி பகுத்தறிவாளர்கள், கடலாவது?, கொள்வதாவது?, அகதியமாவது? ,இலக்கணமாவது?, கண்ணால் காணாமல் எப்படி நம்புவது என்றார்கள், சமீபத்தில் ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படும் வரை. நமக்கு தெரியவில்லை என்பதற்காக ஆழிப்பேரலை என்பது பொய்யாகி விடுமா? அகத்தியம் தான் இல்லையென்று ஆகி விடுமா?
இத்தகு சிறப்பு பொருந்திய நம் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இழிச்செயலாக இனியும் எண்ணாதீர்கள். தமிழர்களாகிய நாம் முடிந்த வரை தமிழிலியே எழுத வேண்டும், தமிழிலியே பேச வேண்டும், தமிழிலியே கையொப்பமிட வேண்டும். என்னிடம் சமீபத்தில் நண்பர் ஒருவர் கேட்டார், "என்னங்க தமிழ்ல கையெழுத்து போடுறீங்க?", நான் திருப்பி கேட்டேன், " வேண்டுமென்றால் நான் இந்தியில் போடவா என்று?". பாவம், அவர் முகத்தில் ஈயாடவில்லை.
தலைப்பெழுத்து முதற்கொண்டு உங்கள் பெயரை தமிழிலேயே எழுதுங்கள். உதாரணமாக என் பெயரை எழுதும் போது மு. திருமால் அழகன் என்றே எழுத வேண்டும். M. திருமால் அழகன் என்று எழுவது பெரும் தவறு.'M' என்பது என்ன?. உலகில் எந்த மொழியிலும் அவர்கள் தலைப்பெழுத்தை வேற்று மொழியில் எழுதுவதில்லை. தங்கள் தாய்மொழியில் தான் எழுதுகிறார்கள். ஆனால் தமிழன் மட்டுமே தன் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி அகமகிழ்கிறான்.
நான் ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையும் அறிந்து கொள்ளுங்கள், ஆனால் தமிழை உதாசினபடுத்தாதீர்கள் என்பது தான் என் ஆதங்கம். நீங்கள் சாப்பிடும் அரிசிச் சோறு தமிழாய் இருக்கட்டும், பொரியல், கூட்டு, அப்பளம் போல் மற்ற மொழிகள் இருக்கட்டும். சோற்றை ஆங்கிலமாக்கிவிட்டு, தயவு செய்து தமிழை ஊறுகாய் ஆக்கிவிடாதீர்கள். தமிழ் என்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு நம் எதிர்கால சந்ததியினரை தயைக்கூர்ந்து தள்ளிவிடாதீர்கள்.
கன்னத்து முத்தமொன்று!
சுட்டும்விழிச் சுடர்தான்,- கண்ணம்மா!சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி,- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்தி ரங்களடீ!
சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ,- கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.
சாத்திரம்பேசுகிறாய்,- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ?- பது பார்,
கன்னத்து முத்தமொன்று!
- நன்றி: மகாகவி சுப்பிரமணிய பாரதி -
தமிழ்
ஆங்கிலம் - மொழி ? கலாச்சாரம் ?
""ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் போலப் பேச வேண்டும்'' என்ற எண்ணமே மொழி பற்றிய சிறுபிள்ளைத்தனமான பேதமை. "தமிழைத் தமிழ் போலப் பேசுகிறோமா?' என்று இவர்களில் பலர் ஏன் சிந்திப்பதே இல்லை?
மொழி குறித்த ஒரு பரந்த பார்வையும், தனது தனித்தன்மை குறித்த ஒரு கம்பீரமும் அற்றுப் போனவர்களே, இப்படி ஓர் அன்னிய மொழியை அன்னியன் போலவே பேசுவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.
""சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்'' என்று பெருமையடித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள், பல்வேறு நாடுகளில், தங்களது ஆட்சிக் கொடியை நாட்டினார்கள். அந்தப் பகுதிகளில் தங்கள் நிர்வாகத்தை நடத்துவதற்கு உதவியாக, அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஆங்கில போதனா முறையைப் புகுத்தினார்கள்.
எனவே ஒவ்வொரு பிரதேசத்து ஆங்கில உச்சரிப்பும், அந்தக் குறிப்பிட்ட மக்களின் தாய்மொழி எதுவோ அதன் மணமும், உச்சரிப்பு மரபும் கலந்தேதான் இருக்கும்.
ஆனால் நமது ஆங்கில மோகத்தில் அதன் உச்சரிப்பைப் பொதுமைப்படுத்தத் துடிக்கிறோம். எந்த ஒரு மொழியையும் அதன் உலகளாவிய வளர்ச்சியால், தேவை கருதி நாம் கற்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதைப் பயன்படுத்தும்போது எந்தவிதத் தாழ்வுணர்ச்சிக்கும் ஆளாக வேண்டிய அவசியமில்லை.
இந்தத் துடிப்பைத் தமிழைச் சரியாக உச்சரிப்பதில் காட்டுகிறோமா? தொலைக்காட்சித் தொகுப்பாளினிகளின் தமிழ் என்பதே ஒரு தனி ""மொலி''யாகத் திரிந்து "ள' கர "ல' கர, "ண' கர, "ன' கர வேறுபாடுகளைப் பொருள்படுத்தாமல் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறதே, கவலைப்படுகிறோமா நாம்?
சரி, மக்கள் பேசும் தமிழுக்கே வருவோம். நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ், தஞ்சைத் தமிழ் என்று பேச்சுவழக்கில், சொற்களின் பிரயோகத்தில், உச்சரிப்பில், பொருளில் மாறுபடுகிறதே இதை நாம் ரசிக்கவில்லையா என்ன! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை.
சில பழமொழிகளும் கூட அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்பத்தான் வரும். ""நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது தண்டு கொழுத்தால் தரையில் இருக்காது'' என்ற பழமொழி நீர்வளமும், நிலவளமும் மிகுந்த தஞ்சைத் தரணியிலிருந்து உருவாகுமே தவிர, வறண்டு போன ராமநாதபுரம் சீமையிலிருந்து வராது.
மக்களின் வாழ்வியலும், வாழிடத்தின் சூழலும் சேர்ந்துதான் அவர்கள் கையாளும் மொழியைத் தீர்மானிக்கின்றன. இது குறித்த தாழ்வுணர்ச்சியோ, அருவறுப்போ கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இந்நிலையில் எங்கோ தொலைதூரத்திலிருந்து வந்து இறங்கிய அன்னிய நாட்டவன், அவனுடைய மொழியை இங்கே அறிமுகம் செய்கிறான்.
அதை ஏதோ ஒரு தேவை கருதி நாமும் கற்கிறோம். அவற்றை நம்முடைய எழுத்திலோ பேச்சிலோ வெளிப்படுத்தும்போது நமது மொழியின் மணமும் மரபும் கலந்துதானே இருக்கும் இதைச் சொல்ல நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலமே உலகின் பல்வேறு மொழிகளின் சொல் வளங்களைத் தன்பால் சுவீகரித்துக் கொண்டதுதானே?
குளிர் மிகுந்த ஐரோப்பிய நாட்டில் அந்நாட்டினர் அணியப் பயன்படுத்திவரும் கோட்டு, சூட், "டை' இவற்றை வெப்பமண்டல நாட்டின் விற்பனைப் பிரதிநிதிகள் அணிந்து வியர்க்க விறுவிறுக்க வெயிலில் அலைகிறார்களே அதுபோன்றதுதான் இது.
ஆங்கில மேடைப்பேச்சில் தன்னிகரற்று விளங்கிய ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார், ஒருமுறை லண்டனில் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது, விரல்களால் எடுத்துச் சாப்பிட்டாராம். முகத்தைச் சுளித்த ஓர் ஆங்கிலேயர், ""இது சுகாதாரமான பழக்கமில்லையே ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடுங்களேன்'' என்றாராம். அதற்கு சாஸ்திரியார் சொன்னாராம்: ""என் விரலாவது என் வாயில் மட்டும்தான் நுழைந்து வெளிவருகிறது ஆனால் ஸ்பூன்களைப் பலரும் அல்லவா பயன்படுத்துகிறார்கள்!''.
இப்படிப்பட்ட தனித்தன்மைதான் நம்மிடையே இன்று அரிதாகிவிட்டது. அதனால்தான் வாய் புண் ஆனாலும் பொருள்படுத்தாமல் "முள் கரண்டிகளை' மென்று கொண்டிருக்கிறோம்...! இங்கே குறிப்பிடுவது மொழியை மட்டுமல்ல!
(கட்டுரையாளர்: கலை, இலக்கிய ஆர்வலர்)
- நன்றி www . dinamani . com -
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)